
அன்று கண்ட காட்சி நிஜமானது
இன்று தோள் சாயும் உன் அன்பு கிடைத்ததால்
நண்பனாய் என்னுள் புகுந்து நாகரீக கள்வனானாய்
கல்லுக்குள் ஈரம்போல உன்னுள் அன்பு கண்டதை
பார்த்தே உருகின என் ஊமைநெஞ்சம்
கண்ணும் கண்ணும் நோக்கியே பலமணித்துளிகள்
மயங்கி பேசிக்கழித்தோம்
எண்ணிலடங்கா நாட்களை காதல் ஜூரம்
தாக்கியும் களித்தோம்
உன் ஒரிரு வார்த்தைகளை ஓராயிரம் தரம்
உச்சரிக்க கேட்டு ரசித்தேன்
உன் ஜாடை பரிமாற்றங்களை அங்கங்கமாய்
பார்த்து வியந்தேன்
நெடுந்தொலைவு கண்டினும் உன் முகம்
எனக்கு வைரலோகம் போலசட்டென
அருகில் நின்றே தலைசாய்த்திடும்
சிறு புன்னகையால்
என்ன சொல்ல ஏது சொல்ல
உன்னருகில் நிற்கும் தருணம்
யார் கேட்பார் என் மன சஞ்சலத்தை
அது உச்சரிக்கும் பாஷை
தான் என்னவோ
உனக்குள் மறைந்து நான்
என்னை தொலைத்தேன்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்
கண்டும் காணத்துடிக்கின்ற
என்னை உன்னில் சரிபாதியாக
No comments:
Post a Comment