Thursday, August 19, 2010

இந்தியா

அள்ளஅள்ள செல்வமும் அழியா வறுமையும் நிறைந்த நாடு.




அரசியலும் அதிகாரமும் ஒருங்கிணைந்த நாடு


அன்பும் அகலா சோகமும் சீர் பெற்ற நாடு


ஆன்மீகமும் ஆசையும் அதிகம் கொண்ட நாடு


ஆண்டவன் சந்நதியும் ஆன்மீக தாகமும் அழியாமல் காக்கும் நாடு


ஆசான் வழிக்கல்வியும் ஆகமங்களையும் பெற்ற சிறந்த நாடு


இயற்கை தார்மீகமும் இன்னல் தரும் துன்பங்களும் ஒன்றே ஜனித்த நாடு


இசையின் ஆதியும் இரவலின் அந்தமும் தோன்றிய நாடு


இமயம்தொட்ட மனிதர்களையும் இலங்கையென்ற கண்ணீரையும் சுவாசிக்கும் நாடு


ஈதல் குணத்தினையும் ஈ போன்ற நடத்தினையும் கொண்ட செந்தமிழ் நாடு


உயரிய கொள்கைகளையும் உத்தமர் காந்தியையும் கண்ட நாடு


ஊர் போற்றும் அரியணையையும் ஊனமுற்ற மனத்தினையும் பெற்ற நாடு


எண்ணிய கணக்கினையும் எட்டில்லா புகழையும் கொண்ட நாடு


ஏணிபோல் உறுதி நெஞ்சையும் ஏமாற்றும் வஞ்சகத்தையும் வளர்த்துவிட்ட நாடு


ஐவகை நிலங்களையும் ஐந்தாம்பிறை படைபலத்தையும் தோற்ற நாடு


ஒற்றுமை பேச்சோடும் ஒன்றாத வீச்சோடும் சரிகின்ற நாடு


ஓமென்ற உச்சரிப்பும் ஒழிந்துப்போ என்ற சீர்க்கேடும் கொண்ட தன்னிலை பெற்ற நாடு


ஔடதமாய் வாழ்கின்ற கலாச்சார நெறியும் வளர்ந்துவரும் நாகரீக அநாகரீகமும் என்றும் பேணிக்காத்திடும் நாடு..என் இந்திய தாய்நாடு

Friday, August 13, 2010

மலரும் மொட்டு......



என்னவென்று சொல்ல...



உன்னை பார்த்தவுடனேயே


பறிக்கத்தான் மனம் நினைக்கிறது...


ஏனோ...


இதயம் கணக்கிறதே...


பிஞ்சு இளங்குழந்தை கன்னத்தை


தடித்த முள்ளால் சீண்டுவது போல...


நெஞ்சு துடிக்கிறதே...


உன்னை தொட நினைக்கையில்..


உன்னை தொட்டு செல்லும்


தென்றலை கண்டும் அஞ்சுகிறேன்..


எங்கே...


அது உன் ஆயுளினை


அபகரித்துவிடுமோ என்று..


எத்தனை முறை பார்த்தேனும்


தாகம் குறையவில்லை எனக்கு...


ஆவல் மிகுகிறதே...


உன்னருகினில் இருந்திட...


உந்தன் வாசம்


எதற்குத்தான் ஒப்பாகும்..


நீயே சொல்லேன்..


என் மனதை


கொள்ளை கொண்டன


உன் தோற்றம்...


விட்டு பிரிய மனம் வரவில்லை...


தொட்டு பறிக்கவும் ஆசை இல்லை...


என்ன செய்வேன்..


உனை கண்டு ரசித்தே...


நொடியினை கரைத்திடுவேன்..


உன் வயதினை எப்படி அறிய..


என்று நீ பிறந்தாயடி என் கண்ணே..


உன் பிறப்பின் ரகசியத்தைக்கூறு...


முயற்சி செய்கிறேன்...


உன் அகவையை..


காணக்கிடைத்திடா உந்தன் முகம்..


என் கண்முன்னே எப்போதும் நிலைத்திடுமா..


நீ அரும்பும் வாசமும் நான் சுவாசித்திட முடியுமா?


சொல்லிடு என் மலரே...


நீ மலர்வது என்று?






அன்புடன்,


யுவா