Friday, September 3, 2010

பேசாமொழி

சொல்லவும் முடியாமல் சொல்லாமலே


தவிக்கின்றது வார்த்தை நா தரகர்களுக்கிடையில்


உன்னை எனக்கு பிடிக்கும் நண்பனாய்


உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் காதலனாய்


உன்னை எனக்கு என்றுமே பிடிக்கும் கணவனாய்


சொல்வாயா??? நானும் உந்தன் உறவென்று!!!

நீரில் இடும் கோலங்கள்.


 நிறைவேறா ஆசை எனினும் நினைக்காதநெஞ்சம் இல்லை

வாடாத மலர் எனினும் வர்ணிக்காத கண்கள் இல்லை

கேட்காத பாடல் எனினும் மயங்காத உள்ளம் இல்லை

தொடாத தேகம் எனினும் தொட்டுசெல்லாததென்றல் இல்லை

பேசாத விழிகள் எனினும் கேட்காத செவிகள் இல்லை

உள்ளம் உரைப்பதை எண்ணமென்ற ஏட்டிலே

எதிர்காலமென்ற எழுத்தாணி கொண்டு

கடிதமாய் வடித்திட்ட வரிகள்

உறக்கமென்ற கனவுக் கோட்டைக்குள்ளே

யாருமற்ற மாயலோக வனாந்தரத்தில்

பறந்துகிடக்கின்றன நொடிப்பொழுதினில்

மறைந்துபோகும் நீரிலிட்ட கோலத்தின் சாயலாய்

கனவென்ற மாளிகைக்குள் கவிதைகளாய் பூக்கின்றன!