Friday, June 25, 2010

வாழ்வின் இறுதி நாள்





ஜந்தாறு மாதங்கள்


என் தாயின் வயிற்றுக்குள்


மறைந்து சிறு துகள் போல


இப்புவியிலே ஜனித்து


காலத்தோடு நானும் சஞ்சரித்து


பாடப்புத்தகத்தையும் சுமந்து


கற்றறிந்த மாந்தர்கள்தம்


கடலில் விளைந்த முத்தை போல


பன்னிரு பருவங்களோடே


வளர்ச்சி கண்டு


மண்ணுலக வேந்தர்களின்


வாழ்வோடு லயித்து


வாழ்ந்த வாழ்வின்


இறுதி தருணம்


இன்றோ நாளையோ...


எதிர்பார்ப்பின்றி வாழ்வுண்டோ...


எதிர்பார்க்காமல் வாழ்பவருண்டோ..


முயன்றும் தோற்றுப்போனேன்...


இ லோகத்தில் வாழத்தகுதியற்றவளாய்..


என் கடைசி தருணம்


கண்ணயரும் நேரம்


என் சுற்றாரும் மற்றாரும்


என் இறப்பினில் மகிழ்வோரே


என்ற தேன் சொரியும் கீதம்


என் செவிக்கு ஒளித்திட்ட


அடுத்த நொடி


நானும் மறைவேனே...


பிறப்புக்கு


நான் செய்த நன்கென்ன????????


யாரும் அறியார்...


பூமிக்கு பாரமாய்


வாழ்வதை விட


நரகத்து காவலாய்


நிற்பதுதான் சரியோ...


என்றும் என் நினைவுகள்


என்னை விட்டு அகலா


வரம் வேண்டும் என் இறைவா..


இதுவே என் எழுத்துக்கு முற்று.......... யுவா......முற்றும்

No comments: