Tuesday, June 22, 2010

கனவுகள்




அன்று கண்ட காட்சி நிஜமானது

இன்று தோள் சாயும் உன் அன்பு கிடைத்ததால்

நண்பனாய் என்னுள் புகுந்து நாகரீக கள்வனானாய்

கல்லுக்குள் ஈரம்போல உன்னுள் அன்பு கண்டதை

பார்த்தே உருகின என் ஊமைநெஞ்சம்

கண்ணும் கண்ணும் நோக்கியே பலமணித்துளிகள்

மயங்கி பேசிக்கழித்தோம்

எண்ணிலடங்கா நாட்களை காதல் ஜூரம்

தாக்கியும் களித்தோம்

உன் ஒரிரு வார்த்தைகளை ஓராயிரம் தரம்

உச்சரிக்க கேட்டு ரசித்தேன்
உன் ஜாடை பரிமாற்றங்களை அங்கங்கமாய்

பார்த்து வியந்தேன்

நெடுந்தொலைவு கண்டினும் உன் முகம்

எனக்கு வைரலோகம் போல‌சட்டென

அருகில் நின்றே தலைசாய்த்திடும்
சிறு புன்னகையால்

என்ன சொல்ல ஏது சொல்ல

உன்னருகில் நிற்கும் தருணம்

யார் கேட்பார் என் மன சஞ்சலத்தை

அது உச்சரிக்கும் பாஷை

தான் என்னவோ

உனக்குள் மறைந்து நான்

என்னை தொலைத்தேன்

இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்

கண்டும் காணத்துடிக்கின்ற

என்னை உன்னில் சரிபாதியாக‌

No comments: