Monday, June 21, 2010

காதல்!!!


விழிமூடும் கதவினுள்ளே புகுந்திட்டே

மனச்சிறைக்குள் ஒளிந்து கொண்டு

சத்தமில்லா புன்னகையால் நம்மை

மந்திரலோகத்தில் துயில செய்யும்

வானில்லா அஷ்ட வர்ணஜாலங்கள்!

அர்த்தமற்ற புன்னகையால் நகைத்து,

கணல்கொண்ட பார்வையை புதைத்து,

சௌந்தர்ய கானம் கொண்டு,

சங்கீதமாய் சலனம் இசைத்து,

எண்ணிலடங்கா கவித்துவம் விளக்கி,

தன்னையே விளக்கிய கனவுத்தேவதை!

No comments: