Monday, June 21, 2010

தமிழ்மொழி!


தன்னிலடங்கா தாயகத்தை
தனக்குள் புகுத்தி,
தரணியெங்கும்
தழைத்தோங்கி,

தென்னாடும் தேர்ப்பூட்டி,
தீபச்சுடராய் மகிழ்ந்திடும்,
தைநாளே
பிறந்திட்டு,

மன்னாரும் வாழ்த்துற,
தொன்றுதொட்டு போற்றிடும்,
தொன்மையாய் நீ (என்
தமிழே)!


தமிழாம்,
தமிழ்ச்சுவையாம்,

செந்தமிழ்க் கவியாம் (என் தமிழே)!

தாரகமந்திரமாய் ஒலித்திடும்,
தமிழின் ஓசை!
திகட்டா
சொற்ச்சுடரின்,

தெளிவுறும் அமுதோசை!
தெவிட்டாத தமிழே!
தேன்மழை சாரலே!
தணலெனினும் எமக்கு நீ!!!!
தணியா வேட்கையே (என்
தமிழே)!!!!!!!!!!

No comments: