Monday, June 21, 2010

காதல்!

என் படைப்பில் எழுதிய முதல் கவிதை!

காதல்!


கண்கள் மோதிட, வார்த்தை மௌனமாகும் பேசா மடந்தை...!

பார்வையில் பேசிக்கொண்டே பரிவர்த்தனை செய்யும் குழந்தை...!

கனவுக்குள் ஊஞ்சல் கட்டி, ராட்டினம் போல் சுழலும் நிந்தை...!

ஈருயிர் ஒர் உயிராய் ஜெனித்திடும் விந்தை...!

கைகோர்த்து நடக்கையில் மனதில் பூத்திடும் பட்டாம்பூச்சி...!

தொலைதூர நோக்கிலும் கண் இமைக்காமல் பார்த்திடும் பட்சி...!

உறவென்று ஒரு சொந்தம் புதிதாய் பிறந்திடும் மகிழ்ச்சி...!

என்னாளும் இது நிலைத்திட இறைவனே இதற்கு சாட்சி...!

உள்ளம் மட்டும் கலந்துரையாடும் பட்டிமன்றம்...!

காவியங்கள் இதை விளக்கிடும் என்றும்...!

இதமாய் கவி நடனமாடிடும் சுரங்கம்...!

கண நொடியும் ஏங்கிடும் வசந்தம்...!

No comments: