Monday, June 21, 2010

குழந்தைகள்!

அன்னை என்ற உறவில் மலர்ந்த பூந்தளிர்!

ஆண்டவன் அருளி தந்த செல்வக்களஞ்சியம்!

இயற்கையாய் மண்ணில் முளைத்த முத்துச்சிப்பி!

ஈன்றளித்த இதயங்களின் காதல் கோபுரம்!

உண்மையை மட்டும் பேசிடும் கண்கள்!

ஊதுகுழலாய் சுற்றித் திரியும் கால்கள்!

எண்ணத்தினை சைகை யாக்கும் பாசாங்கு!

ஏகபோக கடவுளாய் வாழ்ந்திடும் பாங்கு!

ஐஞ்சுவை மொழிகளை அழகாய் பேசியே,

ஒன்றன்பின் ஒன்றாக பிள்ளைத்தமிழில் பாடி,

ஓடம்போல் நம் நெஞ்சில் புகுந்திட்டே,

ஔடதமாய் விளங்கிடும் அர்த்தமில்லா
புன்னகை!

No comments: